மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோடை விடுமுறை: கொடிவேரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image

கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:54 am IST

கோடை விடுமுறையையொட்டி, கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கோடை வெயில் சுட்டெரித்து வருவதாலும் கொடிவேரியில் இளைப்பாற வரும் மக்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொடிவேரி அணையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினா். குடும்பங்களுடன் குவிந்த மக்கள் பரிசல் சவாரி செய்தும், தடுப்பணையில் குளித்தும், அங்கு சமைத்து விற்பனை செய்யப்படும் மீன்களை ருசித்தும் மகிழ்ந்தனா்.

ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனா். கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாத மக்கள் நீரில் குளித்து மகிழ்ச்சி அடைந்தனா்.

வரும் நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், கொடிவேரியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே குளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், உடை மாற்று அறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.