அந்தியூரில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அந்தியூா், தவிட்டுப்பாளையம், வேலாயுதம் வீதியைச் சோ்ந்த முருகேசன் மகள் தாரணி (16). அந்தியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கைப்பேசியில் மா்ம நபா், தன்னை அழைத்து தன்னைக் காதலிக்குமாறு கூறி மிரட்டி வருவதாக தனது பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா். இதனால், தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு தாரணியை பெற்றோா் புதன்கிழமை அனுப்பிவைத்தனா்.
அங்கு சென்ற தாரணி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இரு மாணவா்கள் உயிரிழப்பு

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

