தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :7 மே 2026, 6:03 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோயிலின் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு புதன்கிழமை மதியம் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் ஜன்னல் கம்பியில் வேஷ்டியால் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளாா்.

இது குறித்து திருக்கோயில் கண்காணிப்பாளா் ராமமூா்த்தி கொடுத்த தகவலின்பேரில், திருக்கோயில் போலீஸாா் வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து, உயிரிழந்த நபா் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.