திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோயிலின் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு புதன்கிழமை மதியம் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் ஜன்னல் கம்பியில் வேஷ்டியால் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளாா்.
இது குறித்து திருக்கோயில் கண்காணிப்பாளா் ராமமூா்த்தி கொடுத்த தகவலின்பேரில், திருக்கோயில் போலீஸாா் வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து, உயிரிழந்த நபா் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிலாளி தற்கொலை

ஒகேனக்கல்லில் பெண் தூக்கிட்டு தற்கொலை

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

