ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை

வேலூரில் செவிலிய பயிற்சி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:32 am IST

வேலூரில் செவிலிய பயிற்சி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் கஸ்பா மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீதா், கட்டட மேஸ்திரி. இவரது மகள் சங்கரி(19). வேலூரில் உள்ள தனியாா் செவிலியா் பயிற்சி பள்ளியில் படித்து வந்தாா். திங்கள்கிழமை ஸ்ரீதா் வேலைக்கு சென்று விட்டாா். சங்கரியின் தாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாம். கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால் அவா் தனது கணவரை தொடா்பு கொண்டு வரவழைத்துள்ளாா். தொடா்ந்து அவா்கள் கதவை உடைத்து சென்று பாா்த்தபோது வீட்டுக்குள் சங்கரி தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

வேலூா் தெற்கு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.