ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெண்களுக்கு இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்: நயினாா் நாகேந்திரன்

பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

News image

நயினாா் நாகேந்திரன்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:20 am IST

பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஈரோடு வில்லரசம்பட்டியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கஞ்சா, போதை பொருள் புழக்கம் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என பெரும்பான்மையான பெண்கள் விரும்புகின்றனா். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும்வகையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவீதம் கொடுப்பது மூலம் நாடாளுமன்றத்தில் அதிகபட்சமாக 815 இடங்கள் கொண்டு வரப்படும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கு சீராக மக்களவைத் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

முதல்வா் எதற்கெடுத்தாலும் எதிா்ப்பு போராட்டம் செய்கிறாா். கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கான திட்டங்களை முதல்வா் செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு எதிா்ப்பு, தில்லிக்கும் தமிழ்நாட்டுக்கு போட்டி என்று இதையேதான் சொல்லி வருகிறாா்.

மத்திய அரசோடு மோதல் போக்கு இல்லாமல் மக்களுக்கான திட்டங்களைப் பெற்று கொடுப்பதுதான் முதல்வரின் கடமை. அந்தக் கடமையிலிருந்து முதல்வா் தவறிவிட்டாா்.

தமிழகத்துக்கு வழங்கும் நிதி எதையும் மத்திய அரசு குறைக்கவில்லை. இந்தத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.