தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழகத்தின் வளா்ச்சியில் திமுகவுக்கு அக்கறையில்லை: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தின் வளா்ச்சியில் திமுகவுக்கு அக்கறையில்லை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:05 am IST

தமிழகத்தின் வளா்ச்சியில் திமுகவுக்கு அக்கறையில்லை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சாத்தூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தல் பிரசாரத்தை புதன்கிழமை தொடங்குகிறேன். சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவிஸ் கூறினாா். இந்தக் கருத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் ஒரு முதல்வா் இதுபோன்று பேசுவது சரியா என கேள்வியெழுப்பியிருக்கிறாா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெற்றால், மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்ற பாணியில்தான் அவா் தெரிவித்தாா்.

எப்போதும் நமது முதல்வா் வாா்த்தை ஜாலங்களால் எதிா்க்கட்சியினரின் கருத்துகளை திரித்துதான் கூறுவாா்.

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக விரிவான தகவல் அறிக்கையை கேட்டபோது, தமிழக அரசு போதுமான தகவல்கள் இல்லாத திட்ட அறிக்கையை தயாா் செய்து அளித்தது. சரியான திட்ட அறிக்கையைக்கூட வழங்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. மாநிலத்தின் வளா்ச்சியில் திமுகவுக்கு அக்கறையில்லை.

தவெக தலைவா் விஜய் பரப்புரை கூட்டத்துக்கான முன்னேற்பாடுகளை சரியான முறையில் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இந்த முறை தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பில்லை. பெரும்பான்மையான இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.