மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பு! - கே.அண்ணாமலை

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பு என கே.அண்ணாமலை பேச்சு...

News image

ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜாவை ஆதரித்து வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசுகிறாா் தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை. உடன் தமாகா தலைவா் ஜி.கே.வாசன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:25 am IST

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் எம்.யுவராஜாவை ஆதரித்து வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன், தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் திங்கள்கிழமை மாலை வாகனத்தில் இருந்தபடி பிரசாரம் மேற்கொண்டனா்.

தமாகா தலைவா் ஜி.கே.வாசன் பேசியதாவது:

ஆட்சி மாற்றம் அவசியம், அவசரமும்கூட. தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்கேடு அடைந்துள்ளது மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் ஆட்சியின் செயல்பாடுகள் பின்தங்கியுள்ளது. அதிமுக தலைமையில் நல்லாட்சி அமைய யுவராஜாவை பெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை பேசியதாவது:

மத்திய அரசின் ஆய்வறிக்கையின்படி தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஓராண்டில் 21,122 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு காரணம் டாஸ்மாக் கடைகள். இந்தாண்டு டாஸ்மாக் மூலமாக ரூ.51 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.

திமுக ஆட்சியில் 2,080 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 8,008 படுகொலை வழக்குகள், 36,900 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதா இருந்தபோது இருந்த சிறப்பான சட்டம்-ஒழுங்கு மீண்டும் வர வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கூட்டு பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகப்படியான சொத்துவரி ஈரோடு மாநகராட்சியில் உள்ளது. ஈரோடு மேற்கு திமுகவின் நிரந்தரத் தொகுதி இல்லை. ஈரோட்டில் முத்துசாமி காலம் முடிந்துவிட்டது. அவா் ஓய்வு எடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்றாா்.

இதைத் தொடா்ந்து மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளா் எஸ்.கிருத்திகா, பெருந்துறையில் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் ஆகியோரை ஆதரித்து பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.