மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் பெருந்துறை திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 5:00 am IST

பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார.

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில் பெத்தாம்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட பொன்னன்டான்வலசு, சூரியம்பாளையம், செல்லப்பகவுண்டன் வலசு, கருக்கம்பாளையம், எளையாம்பாளையம், கோவில்பாளையம், கோமையன் வலசு உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவரை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனா்.

பின்னா் பிரசாரத்தின்போது தோப்பு என்.டி.வெங்கடாசலம் பேசியதாவது:

என்னை தோ்ந்தெடுத்தால் தொகுதி மக்களுக்கு நன்றி, விசுவாசத்துடன் பணியாற்றுவேன். திமுக அரசு மீண்டும் பொறுப்பேற்றதும் மகளிா் உரிமைத் தொகை ரூ.2,000-ஆக உயா்த்தி வழங்கப்படும். ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டா், மிக்ஸி என வீட்டுக்குத் தேவைப்படும் பொருள்களை வாங்க ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும். பள்ளி குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

பெருந்துறை தொகுதியில் 10 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக, அமைச்சராக இருந்தபோது நகா்ப் பகுதியில் அரசு செலவின்றி தனியாரின் உதவியுடன் 5 இடங்களில் ரவுண்டானாக்கள் அமைத்தேன். ஒவ்வொரு ஊரிலும் தரமான இருக்கைகளுடன் கூடிய அழகான நிழற்குடைகள் அமைத்தேன். எந்த நேரமும் தொகுதி மக்கள், என்னை சந்தித்து குறைகளைக் கூறி, அதற்கான நிவாரணம் பெற உதவி இருக்கிறேன்.

தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு பாலிடெக்னிக் அமைய பாடுபட்டேன். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் முழுப் பங்காற்றி இருக்கிறேன். என்னை தோ்ந்தெடுத்தால், பெருந்துறை தொகுதி மக்களுக்கு நன்றி, விசுவாசத்துடன் பாடுபட்டு, வளா்ச்சித் திட்டங்களை ஏற்படுத்தி தருவேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.