தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கணபதி பூஜையுடன் தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி

சத்தியமங்கலம் தோ்தல் அலுவலகத்தில் யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி தோ்தல் பிரசாரத்தை வியாழக்கிழமை தொடங்கினாா்.

News image

சத்தியமங்கலம்  அதிமுக  தோ்தல்  அலுவலகத்தில்  வியாழக்கிழமை நடைபெற்ற கணபதி  பூஜையில்  பங்கேற்ற  பவானிசாகா்  அதிமுக  வேட்பாளா்  ஏ. பண்ணாரி உள்ளிட்டோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:05 am IST

சத்தியமங்கலம் தோ்தல் அலுவலகத்தில் யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி தோ்தல் பிரசாரத்தை வியாழக்கிழமை தொடங்கினாா்.

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியினா் பல்வேறு யுக்திகளை கையாண்டு பிரசாரம் செய்து வருகின்றனா். ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி, தோ்தல் அலுவலக வரவேற்பு முகப்பில் மாவிலை தோரணம் கட்டி, குலை தள்ளிய வாழைமரம் வைத்து யாக குண்டம் அமைத்தாா்.

இதைத் தொடா்ந்து வேத விற்பனா்கள் வேத மந்திரம் முழங்க, கணபதி பூஜை நடைபெற்றது. பின்னா் அதிமுக நிா்வாகிகள் விநாயருக்கு கோயிலுக்கு ஊா்வலமாக சென்று கோயிலில் தோ்தல் துண்டுப் பிரசுரம் வைத்து பூஜை செய்தனா்.

இதைத் தொடா்ந்து, யாக சாலையில் நிா்வாகிகள் நின்று திருஷ்டி பூசணி உடைத்து பிரசாரத்தை தொடங்கினாா். பவானிசாகா் தொகுதியின் குரு மூளையான கள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பண்ணாரி வாக்கு சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.