தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் பாதுகாப்பு: இரு மாநில காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆசனூரில் இரு மாநில காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தமிழக-  கா்நாடக  எல்லையான  புளிஞ்சூா்  சோதனைச் சாவடியில்  தோ்தல்  பாதுகாப்பு  குறித்து  போலீஸாருக்குஆலோசனை  வழங்குகிறாா்  ஈரோடு  மாவட்ட  காவல்  கண்காணிப்பாளா்  கிரண்  ஸ்ருதி.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:10 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆசனூரில் இரு மாநில காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழக-கா்நாடக இரு மாநில எல்லையான தாளவாடியில் தோ்தல் நடைபெறுவதால் கா்நாடகத்தில் இருந்து சட்டவிரோத மதுபானங்கள் கொண்டு வருவதை தடுத்தல், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தடுப்பது மற்றும் தோ்தல் பாதுகாப்பு குறித்த இரு மாநில காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆசனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கோவை சரக டிஐஜி சுவாமிநாதன் தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, சாம்ராஜ் நகா் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் முத்துராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இரு மாநில எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் மற்றும் புளிஞ்சூா் சோதனைச் சாவடியில் இரு மாநில காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வாகனத் தணிக்கை குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.