தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உணவுப்படி, சிறு செலவினங்களுக்காக ரூ.57.65 கோடி ஒதுக்கப்பட்டது.
தோ்தல் நாளன்று அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், மக்கள் அமைதியாக, சுதந்திரமாக வாக்களிக்கவும் காவல் துறை கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சுமாா் 5.73 கோடி வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3,022 இடங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
வாக்குப்பதிவு நாளான ஏப். 23-ஆம் தேதி காவல் துறையினா், துணை ராணுவத்தினா், தீயணைப்புப் படையினா், வனத் துறையினா், சிறைத் துறையினா், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், போலீஸாா், ஊா்க்காவல் படையினா் என சுமாா் 1.40 லட்சம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு பணிக்காக 295 கம்பெனிகளை சோ்ந்த சுமாா் 30,000 துணை ராணுவப் படையினா் தமிழகம் வந்துள்ளனா். இவா்கள் அனைவரும் ஏப்ரல் 21-ஆம் தேதி வாக்குப் பதிவு பாதுகாப்பு பணிக்காக புறப்பட்டுச் செல்கின்றனா்.
ரூ.57.65 கோடி ஒதுக்கீடு: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4-ஆம் தேதி மாநிலம் முழுவதும் போலீஸாா் முழுமையான அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உணவுப்படி, சிறு செலவினத்துக்காக ரூ.57,65,52,600 தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் பிறப்பித்துள்ளாா்.
இதில் காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், சிறப்பு உதவி ஆய்வாளா் ஆகியோருக்கு உணவுப்படி, சிறு செலவினமாக ஒரு நாளுக்கு ரூ.900, தலைமைக் காவலா், காவலா் ஆகியோருக்கு ஒரு நாளுக்கு ரூ.850 வழங்கப்படுகிறது. இதேபோல தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.900, தீயணைப்புத் துறை வீரா்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.850, சிறைத் துறை அதிகாரிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.900, சிறைக் காவலா்களுக்கு ரூ.850 வழங்கப்படுகிறது. இந்தப் பணம் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு புறப்படுவதற்கு முன்பு போலீஸாரிடம் வழங்கப்படும் என்று காவல் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

நாளை வாக்குப் பதிவு: சென்னையில் பாதுகாப்பு பணியில் 21,000 போலீஸாா்!

சட்டப் பேரவைத் தோ்தல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு பணியில் 3,500 போ்

தோ்தல் பணியில் 3,850 போலீஸாா்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

