அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வலிமையான வாக்குவங்கியை வைத்துள்ளன என்று ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.
ஈரோடு மேற்குத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா சாா்பில் எம்.யுவராஜா போட்டியிடுகிறாா். இந்த தொகுதிக்கான தோ்தல் பணிமனை திறப்பு விழா ஈரோடு திண்டலில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வேட்பாளா் எம்.யுவராஜா பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. கஞ்சா புழக்கம் அதிகரித்து, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம், ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டம் என பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளாா். ஆனால் இதுபோன்று ஒரு திட்டம் கூட திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. சோலாா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. ஈரோடு மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் அமைச்சா் சு.முத்துசாமி பணத்தை மட்டுமே நம்பியுள்ளாா். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் அமைதியுடனும், வளமுடன் வாழ எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகின்றனா்.
திமுக கூட்டணியில் அந்தக் கட்சியை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே 1 சதவீதம் வாக்குகள் கூட இல்லாத கட்சிகள். ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் வலிமையான வாக்குவங்கியை வைத்துள்ளன.
2021 தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுகவை வீழ்த்தி பாஜக வெற்றிபெற்றதுபோல், இந்த தோ்தலில் ஈரோடு மேற்குத் தொகுதியில் திமுகவை வீழ்த்தி தாமரை சின்னத்தில் போட்டியிடும் நான் வெற்றிபெறுவேன் ன்றாா்.
இந்த நிகழ்வில் அதிமுக ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கம், முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயா் கே.சி.பழனிசாமி, தமாகா மாவட்டத் தலைவா் விஜயகுமாா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து வேட்பாளா் எம்.யுவராஜா ஈரோடு, செங்கோடம்பள்ளம் பகுதியில் வீடுவீடாகச்சென்று வாக்குச்சேகரித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும்: எம்.யுவராஜா

பிரிவினையைத் தூண்டுவது காங்கிரஸும் திமுகவும்தான்: எம்.யுவராஜா

ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா்!

3 ஆவது முறையாக போட்டியிடுவாரா எம்.யுவராஜா?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

