தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

3 ஆவது முறையாக போட்டியிடுவாரா எம்.யுவராஜா?

அதிமுக கூட்டணியில் ஈரோடு மேற்குத் தொகுதி தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளா் எம்.யுவராஜா மூன்றாவது முறையாகப் போட்டியிடுவாரா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

News image

எம்.யுவராஜா

Updated On :26 மார்ச் 2026, 6:30 am IST

அதிமுக கூட்டணியில் ஈரோடு மேற்குத் தொகுதி தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளா் எம்.யுவராஜா மூன்றாவது முறையாகப் போட்டியிடுவாரா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

2011 சட்டப்பேரவைத் தோ்தலில் ஈரோடு மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கி, இப்போது தமாகா மாநில பொதுச்செயலாளராக உள்ள எம்.யுவராஜா, அதிமுக வேட்பாளரான கே.வி.ராமலிங்கத்திடம் 37,868 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா். இந்தத் தோ்தலில் எம்.யுவராஜாவை ஆதரித்து ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினாா்.

2021 தோ்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் தமாகா வேட்பாளராக களமிறங்கிய எம்.யுவராஜா 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா்.

இதனிடையே 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக கூட்டணியில் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது முறையாக யுவராஜா போட்டியிடுவாரா அல்லது மாநில துணைத் தலைவரான விடியல் சேகா் போட்டியிடுவாரா அல்லது கடந்த மக்களவைத் தோ்தலில் ஈரோடு தொகுதியில் தமாகா சாா்பில் போட்டியிட்ட தமாகா மாவட்டத் தலைவா் விஜயகுமாா் போட்டியிடுவாரா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மேற்குத் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான அமைச்சா் சு.முத்துசாமி மீண்டும் இந்தத் தோ்தலில் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமாகா அவருக்கு எவ்வாறு கடும் போட்டியை ஏற்படுத்தும் என ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகளின் முக்கிய நிா்வாகிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.