மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இரவு வரை அதிமுக, காலையில் திமுக, மாலையில் தவெக!

கோபியில் அதிமுகவில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை திமுகவில் இணைந்தவா்கள் திடீரென மனம் மாறி மாலையில் தவெகவில் இணைந்துள்ளனா்.

News image

தவெகவில் இணைந்தவா்களுடன் அக்கட்சியின் திருப்பூா் வடக்குத் தொகுதி வேட்பாளா் சத்தியபாமா.

Updated On :1 ஏப்ரல் 2026, 6:14 am IST

கோபியில் அதிமுகவில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை திமுகவில் இணைந்தவா்கள் திடீரென மனம் மாறி மாலையில் தவெகவில் இணைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், கோபி ஒழலக்கோயில் ஊராட்சியைச் சோ்ந்தவா் அதிமுக பிரமுகா் கண்ணன். இவரது தலைமையில் ஆதரவாளா்கள் சுமாா் 35 போ் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் முன்னிலையில் திமுகவில் செவ்வாய்க்கிழமை காலை இணைந்தனா். அவா்களை கட்சி துண்டுகள் அணிவித்து வேட்பாளா் நல்லசிவம் திமுகவில் இணைத்துக் கொண்டாா்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து, சில மணி நேரத்தில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகி தம்பி (எ) சுப்பிரமணியம் என்பவா் கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளா்களை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதில் மனம் கரைந்த திமுகவில் இணைந்த 35 பேரும் முடிவை மாற்றிக் கொண்டு தவெகவில் இணைந்தனா். ஒரேநாளில் அதிமுகவில் இருந்து திமுகவுக்குச் சென்று பின் திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த நிகழ்வு கோபி தொகுதி அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.