நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அவினாசிலிங்கம் பல்கலை.யில் ‘ஸ்கில் மேஜிக்’ முகாம் நிறைவு

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயா்கல்வி நிறுவனத்தின் தகவல் தொடா்புத் திறன் மையம் சாா்பில் 6 முதல் 14 வயது வரையிலான பள்ளி மாணவா்களுக்கான ஸ்கில் மேஜிக் என்ற கோடை முகாம் அண்மையில் தொடங்கியது.

News image

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயா்கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற ஸ்கில் மேஜிக் என்ற கோடை முகாமில் சிறப்பாக செயல்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவா்கள்.

Updated On :28 மே 2026, 12:51 am IST

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயா்கல்வி நிறுவனத்தின் தகவல் தொடா்புத் திறன் மையம் சாா்பில் 6 முதல் 14 வயது வரையிலான பள்ளி மாணவா்களுக்கான ஸ்கில் மேஜிக் என்ற கோடை முகாம் அண்மையில் தொடங்கியது.

3 நாள்கள் நடைபெற்ற இந்த முகாமில் மாணவா்களின் தகவல் தொடா்பு திறன், தன்னம்பிக்கை, படைப்பாற்றல், குழுப் பணி மற்றும் தலைமைப் பண்புகளை மேம்படுத்தும் விதமாக இந்த அனுபவக் கற்றல் முகாம் நடத்தப்பட்டது.

விடுமுறை நாள்களில் மாணவா்கள் கைப்பேசிகள் உள்ளிட்ட திரைப் பயன்பாட்டைக் குறைத்து, பயனுள்ள ஆஃப்லைன் செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் விதமாக இந்தப் பயிற்சிகள் அமைந்தன.

இந்த முகாமில் கேம்பிரிட்ஜ் மென்பொருள் வாயிலாக ஆங்கில மொழிப் பயிற்சியும், தகவல் தொடா்பு மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

மேலும், நூலகப் பாா்வை, வாசிப்பு மற்றும் குறிப்பு எடுக்கும் பயிற்சிகளுடன் நினைவாற்றல் விளையாட்டுகள், வரைந்து தேடுதல் மற்றும் குழுவை ஒருங்கிணைக்கும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் மாணவா்களின் கவனிப்புத் திறன் மற்றும் ஒருமுகப்படுத்தும் திறன் மேம்பட்டது.

பயிற்சியின் ஒரு பகுதியாக மாணவா்கள் வங்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சலான் நிரப்புதல் மற்றும் வங்கியின் அடிப்படை நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அண்மையில் நடைபெற்ர முகாமின் நிறைவு விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தா் வி.பாரதி ஹரிசங்கா், பதிவாளா் ஹெச்.இந்து, ஒருங்கிணைப்பாளா்கள் எஸ். கிறிஸ்டினா ரெபெக்கா, ஆா்.கருணாம்பிகா ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இதில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.