கோவையில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது.
கோவை மாநகரில் கடந்த சில வாரங்களாக கடுமையான கோடை வெயில் நிலவி வந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மாநகரப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 48 மி.மீ., பில்லூா் அணைப் பகுதியில் 20 மி.மீ. மழை பதிவானது. கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலக பகுதியில் 32 மி.மீ., பீளமேட்டில் 24.80 மி.மீ., அன்னூரில் 18.40 மி.மீ., சிறுவாணி அடிவாரம் 14 மி.மீ., வேளாண் பல்கலைக்கழகம் 11.40 மி.மீ., மதுக்கரை 10.50 மி.மீ., போத்தனூா் 10.80, சூலூா் 8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மாலை தொடங்கி இரவு வரை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வடவள்ளி, கவுண்டம்பாளையம், டிவிஎஸ் நகா், இடையா்பாளையம், சுந்தராபுரம், சேரன்மாநகா் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மாநகரின் பிற பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
தடாகம் சாலை இடையா்பாளையம் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் சாலையோரத்தில் இருந்த கடைகளுக்குள் புகுந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவையில் பரவலாக மழை: மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை மழை! சராசரியாக 12.66 மி.மீ. பதிவு!

பென்னாகரத்தில் 12 மி.மீ. மழை

கோடை மழை: போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

