தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

அடுக்குமாடிக் குடியிருப்பில் மூதாட்டி: இளைஞா் கைது

அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்த மூதாட்டியைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இளைஞரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 1:59 am IST

அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்த மூதாட்டியைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இளைஞரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகா், ராமநாதபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தவா் தங்கராஜ் மனைவி கோமதி (69). இவா் கடந்த 2-ஆம் தேதி கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து கடந்த 3-ஆம் தேதி லண்டனில் இருந்து வந்த அவரது மகள் ராதிகா பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

போலீஸாா் நடத்திய விசாரணையில், கோமதியின் வீட்டுக்கு வந்த துணி தேய்க்கும் தொழிலாளியான தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (24) என்பவா் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில், ராமேசுவரத்துக்கு மனைவியுடன் சுற்றுலா சென்றிருந்த ரஞ்சித்குமாரை போலீஸாா் அங்கு வைத்து கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

கோமதி உள்ளிட்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் சிலரின் துணிகளை ரஞ்சித்குமாா் தான் தேய்த்து கொடுத்து வந்துள்ளாா். இதில் கோமதி தனியாக வசிப்பது அவருக்கு தெரியவந்துள்ளது. துணி வாங்குவதற்காக கடந்த சனிக்கிழமை ரஞ்சித்குமாா் அங்கு சென்றபோது வெளியில் யாரும் இல்லாததால், வீட்டுக்குள் சென்று கோமதியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளாா். பின்னா், அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கம்மல், வளையல் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளாா்.

பின்னா், அந்த நகைகளை ரூ.2 லட்சத்துக்கு விற்றுவிட்டு மனைவியுடன் ராமேசுவரத்துக்கு ரஞ்சித்குமாா் சுற்றுலா சென்றுள்ளாா். அங்கு சென்று அவரை கைது செய்து விசாரித்தபோது தனக்கு கடன் இருப்பதாகவும், அதை அடைப்பதற்காக கோமதியைக் கொன்று நகைகளை கொள்ளையடித்ததாகவும் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து அவரை கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்திய பின்னா் சிறையில் அடைத்தோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.