பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியால் தமிழக மக்கள் கண்ணீா் வடித்து வருகின்றனா். மாநிலத்தில் சுமாா் 9,000 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும், 3,500-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனா். கொங்கு மண்டலத்தில் மக்கள் தோட்டங்களில் அச்சமின்றி வாழ முடியாத சூழல் நிலவுகிறது.
சட்டம்- ஒழுங்கைக் காக்கத் தவறிய முதல்வா் மு.க.ஸ்டாலின், பழைய முகங்களையே மீண்டும் வேட்பாளா்களாக நிறுத்தியுள்ளாா். இவா்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பாா்கள். கஞ்சா மற்றும் பாலியல் வன்கொடுமைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க எம்.ஜி.ஆா். வழியில் வந்த எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தூா் பேரவைத் தொகுதியில் நயினாா் நாகேந்திரன் பிரசாரம்

திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள்: நயினாா் நாகேந்திரன்

பாவூா்சத்திரத்தில் நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: நயினாா் நாகேந்திரன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

