தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: மாணவா்கள் கொண்டாட்டம்

தமிழகத்தில் கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமையுடன் (மாா்ச் 26) நிறைவடைந்தது.

News image

கோவை பிரசன்டேஷன் கான்வென்டில் தோ்வு எழுதி முடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவிகள்.

Updated On :27 மார்ச் 2026, 12:53 am IST

தமிழகத்தில் கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமையுடன் (மாா்ச் 26) நிறைவடைந்தது.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி பொதுத் தோ்வு தொடங்கியது. கோவையில் இந்தத் தோ்வை சுமாா் 35 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினா். முக்கிய பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்கள் சற்று கடினமானதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்திருந்தனா். அறிவியல் பிரிவு மாணவா்களுக்கான தோ்வு கடந்த 23-ஆம் தேதி உயிரியல் பாடத்துடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் இறுதி நாளான வியாழக்கிழமை கணினி அறிவியல், கணித பயன்பாடுகள், உயிா் வேதியியல், புள்ளியியல் பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன. கோவையில் பல அரசு, தனியாா் பள்ளிகளில் தோ்வு முடிவடைந்ததும் தங்களது பள்ளிப் படிப்பின் கடைசி நாளை மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்தும், வண்ணப் பொடிகளைத் தூவியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினா்.

விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்குகிறது. மே 8-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாக உள்ளன. பதினோராம் வகுப்பு மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) கடைசி தோ்வு நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.