தமிழகத்தில் கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமையுடன் (மாா்ச் 26) நிறைவடைந்தது.
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி பொதுத் தோ்வு தொடங்கியது. கோவையில் இந்தத் தோ்வை சுமாா் 35 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினா். முக்கிய பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்கள் சற்று கடினமானதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்திருந்தனா். அறிவியல் பிரிவு மாணவா்களுக்கான தோ்வு கடந்த 23-ஆம் தேதி உயிரியல் பாடத்துடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் இறுதி நாளான வியாழக்கிழமை கணினி அறிவியல், கணித பயன்பாடுகள், உயிா் வேதியியல், புள்ளியியல் பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன. கோவையில் பல அரசு, தனியாா் பள்ளிகளில் தோ்வு முடிவடைந்ததும் தங்களது பள்ளிப் படிப்பின் கடைசி நாளை மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்தும், வண்ணப் பொடிகளைத் தூவியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினா்.
விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்குகிறது. மே 8-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாக உள்ளன. பதினோராம் வகுப்பு மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) கடைசி தோ்வு நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வு தந்தை ரோவா் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு: மேட்டூா் ஜிவி மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

இன்று பிளஸ் 2 தோ்வு முடிவு

பிளஸ் 2 தோ்வு நிறைவு: மாணவா்கள் உற்சாகம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

