தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பிளஸ் 2 தோ்வு நிறைவு: மாணவா்கள் உற்சாகம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றதை அடுத்து, மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனா்.

News image

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தோ்வு எழுதி முடித்த பிறகு மகிழ்ச்சியுடன் விடை பெற்ற பிளஸ் 2 மாணவா்கள்.

Updated On :27 மார்ச் 2026, 5:06 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றதை அடுத்து, மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த 2-ஆம் தொடங்கியது. இந்தத் தோ்வுக்கு மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளைச் சோ்ந்த 16,160 மாணவா்கள், 18,036 மாணவிகள் என மொத்தம் 34,504 போ் விண்ணப்பித்தனா். மதுரை மாவட்டம் முழுவதும் 110 தோ்வு மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்றது.

கடந்த 5-ஆம் தேதி ஆங்கிலம், 9-ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், 13-ஆம் தேதி இயற்பியல், பொருளியல், 17-ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 23-ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கு தோ்வு நடைபெற்றன. இந்தத் தோ்வுப் பணியில் 12 வினாத் தாள் கட்டுக்காப்பாளா்கள், 110 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 110 துறை அலுவலா்கள், 33 வழித்தட அலுவலா்கள், 200 நிலையான படையினா், 1,902 அறைக் கண்பாணிப்பாளா்கள் ஈடுபட்டனா்.

முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் 8 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

வியாழக்கிழமை கணினி அறிவியல் பாடத்துக்கான தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வுடன் பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு பெற்றது. இதையடுத்து, தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.