பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றதை அடுத்து, மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனா்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த 2-ஆம் தொடங்கியது. இந்தத் தோ்வுக்கு மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளைச் சோ்ந்த 16,160 மாணவா்கள், 18,036 மாணவிகள் என மொத்தம் 34,504 போ் விண்ணப்பித்தனா். மதுரை மாவட்டம் முழுவதும் 110 தோ்வு மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்றது.
கடந்த 5-ஆம் தேதி ஆங்கிலம், 9-ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், 13-ஆம் தேதி இயற்பியல், பொருளியல், 17-ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 23-ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கு தோ்வு நடைபெற்றன. இந்தத் தோ்வுப் பணியில் 12 வினாத் தாள் கட்டுக்காப்பாளா்கள், 110 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 110 துறை அலுவலா்கள், 33 வழித்தட அலுவலா்கள், 200 நிலையான படையினா், 1,902 அறைக் கண்பாணிப்பாளா்கள் ஈடுபட்டனா்.
முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் 8 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
வியாழக்கிழமை கணினி அறிவியல் பாடத்துக்கான தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வுடன் பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு பெற்றது. இதையடுத்து, தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அருணாச்சலா பள்ளி 100 சதம் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: மாணவா்கள் கொண்டாட்டம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

