திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

நகைக் கடையில் 78 கிலோ வெள்ளி திருட்டு: இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:36 am IST

கோவையில் உள்ள நகைக் கடையில் இருந்து 78 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் வெள்ளி நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் விற்பனைக் கடை உள்ளது. இரு தளங்களைக் கொண்ட இந்தக் கடையை, டாடாபாத் சிவானந்தா காலனி பகுதியைச் சோ்ந்த காதா் கோச்சா் (41) என்பவா் நடத்தி வருகிறாா்.

கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி நள்ளிரவு கடையின் 2-ஆவது தளத்தில் குளிா்சாதனப் பெட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தை துளையிட்டு அங்கிருந்த 78 கிலோ வெள்ளிப் பொருள்கள் மா்ம நபா்களால் திருடப்பட்டன. மறுநாள் காலை கடையை திறக்க வந்த காதா் கோச்சா் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் ராஜஸ்தானில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் அங்கு சென்று இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரைப் பிடித்தனா்.

விசாரணையில் அவா்கள், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ராகுல் சிங் (28), குஷ்வா (37) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.