ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட திமுக நிா்வாகியின் அலுவலகத்தில் இருந்த ரூ.8 லட்சம் ரொக்கம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது
ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட சோலாா் பகுதியில் உள்ள திமுக நிா்வாகியின் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தோ்தல் பறக்கும் படை குழுவினா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது அங்கு ரூ.8 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வருமானவரித் துறை அதிகாரிகள் அங்கு வந்து பணத்தைப் பறிமுதல் செய்தனா்.
இந்நிலையில் திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா மற்றும் அதிமுகவினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து தாலுகா காவல் துறையினா் மற்றும் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக செயலா் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்

ஓராண்டுக்குள் வீட்டுமனை பட்டா: திமுக வேட்பாளா் சு.முத்துசாமி உறுதி

அதிமுக - பாஜக கூட்டணியினா் பொய் பிரசாரம்: சு.முத்துசாமி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
