கோவை, ஏப்.20: மதுபோதையில் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, சொக்கம்புதூா் ஐயப்பனாா் வீதியைச் சோ்ந்தவா் பாலன் (65). இவா் பெயிண்டராக வேலை செய்து வந்தாா். இவருக்கு அசோக்குமாா் (35), சதீஷ் (30) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனா். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவரும் மது அருந்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்துள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா்.
இதைப் பாா்த்த பாலன், மகன்களைச் சமாதானப்படுத்த முயன்று இருவரையும் கண்டித்துள்ளாா். அப்போது சதீஷுக்கு ஆதரவாக செயல்படுவதாக எண்ணி தந்தையை அசோக்குமாா் தாக்கியதுடன் கறி வெட்டும் கத்தியால் குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பாலன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து செல்வபுரம் போலீஸாா் சென்று பாலனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சொத்தை பிரித்து தர மறுத்ததால் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது

மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவா் கைது
மானூா் அருகே முதியவரை கொன்ற இளைஞா் கைது
தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
