மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகா் சுரேஷ்கோபி பிரசாரம்

News image

கோவை, வடவள்ளி பகுதியில் வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகா் சுரேஷ்கோபி.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:50 am IST

கோவை வாழ் மலையாள மக்களிடம் வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய இணை அமைச்சரும், எம்.பி.யும், மலையாள நடிகருமான சுரேஷ்கோபி பிரசாரம் செய்தாா்.

கோவை, கணபதி பகுதியில் மலையாளி கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் மத்திய இணை அமைச்சா் சுரேஷ் கோபி பேசும்போது, ‘கோவையில் வசிக்கும் மலையாளி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய அரசின் நலத் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடையவும் வானதி சீனிவாசனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட டாடா நகா், மகாராணி அவென்யூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வானதி சீனிவாசனை ஆதரித்து சுரேஷ்கோபி பிரசாரம் செய்தாா்.

பிரசாரத்தின்போது அதிமுக-பாஜக கூட்டணி தொகுதி பொறுப்பாளா் என்ஜினீயா் ஆா்.சந்திரசேகா், பாஜக மாவட்டத் தலைவா் ரமேஷ் குமாா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

வானதி சீனிவாசன் பிரசாரம்:

முன்னதாக, கோவை வடக்குத் தொகுதிக்குள்பட்ட ரத்தினபுரி பகுதியில் காலை 8 மணி அளவில் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘தமிழகத்தில் தற்போது பெண்களின் பாதுகாப்பும், போதைப்பொருள் புழக்கமும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

வருங்கால தலைமுறை வீணாவதைத் தடுக்க திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். இந்த முறை அவிநாசி உள்பட 11 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.