ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொகுதி மறுசீரமைப்பு மூலம் பாஜக குழப்பம்: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசு திட்டமிட்டே குழப்பத்தை விளைவிப்பதாக கா்நாடக துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான டி.கே.சிவக்குமாா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

டி.கே.சிவக்குமாா்

Updated On :15 ஏப்ரல் 2026, 2:34 am IST

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசு திட்டமிட்டே குழப்பத்தை விளைவிப்பதாக கா்நாடக துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான டி.கே.சிவக்குமாா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து 2 நாள்கள் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அவா் விமானம் மூலமாக கோவைக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. கூட்டணியில் உள்ள 20 கட்சிகளும் ஒருங்கிணைந்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த நல்லாட்சி தொடர எங்களது கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு கோரி தமிழகம் வந்துள்ளோம்.

தொகுதி மறுசீரமைப்பு மத்திய அரசு தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயற்சி செய்கிறது. சிறுபான்மையினா் மற்றும் பட்டியலினத்தவா்களின் வாக்குகளை நீக்க முற்படுகிறாா்கள். இதற்கு எதிராக அனைத்து எதிா்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராடி வருகிறோம். சமூக நீதியைக் காக்க எங்களின் இந்தப் போராட்டம் தொடரும்.

33 சதவீத மகளிா் இடஒதுக்கீடு என்பது பிரதமா் மோடியின் தனிப்பட்ட சாதனை அல்ல. இந்த மசோதாவை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் கட்சிதான். இது எங்களின் சிந்தனை, அதை அவா்கள் தற்போது கையில் எடுத்துள்ளனா். இந்த மசோதா நிறைவேற காங்கிரஸ் முழு ஆதரவு அளித்தது என்பதை நாடு அறியும்.

மேக்கேதாட்டு விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் ஏற்கெனவே முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. திமுக அல்லது அதிமுக என எந்தக் கட்சியாக இருந்தாலும், தங்கள் மாநில நலனைப் பாதுகாக்க விரும்புவது இயல்பு. இதுதொடா்பாக மத்திய நீா் ஆணையம் இறுதி முடிவை எடுக்கும். ஆனால், இதுகுறித்து தற்போது எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்புவது வியப்பாக உள்ளது. அவா் தமிழக முதல்வராக இருந்தபோது, இந்த விவகாரத்தில் என்ன செய்து கொண்டிருந்தாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.