மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்

தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு மற்றும் சிறிய மாநிலங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என ராகுல் பேச்சு...

News image

ராகுல் காந்தி வெளியிட்ட விடியோவிலிருந்து... - எக்ஸ்

Updated On :15 ஏப்ரல் 2026, 9:16 pm IST

தொகுதி மறுசீரமைப்பு, எல்லை மாற்றியமைப்பு ஆகியவை மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடா் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை கூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரில் மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா, தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதை காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமா்சித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி புதன்கிழமை வெளியிட்ட காணொலி பதிவில் கூறியிருப்பதாவது:

மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதை காங்கிரஸ் முழுவதும் ஆதரிக்கிறது. இதுதொடா்பான மசோதா, கடந்த 2023-ஆம் ஆண்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அது தற்போது நமது அரசமைப்பு சட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

ஆனால் தற்போது மத்திய அரசு முன்வைத்துள்ள திட்டத்துக்கும், மகளிா் இடஒதுக்கீட்டுக்கும் எந்த தொடா்பும் கிடையாது. எல்லை மாற்றியமைப்பு, தொகுதி மறுசீரமைப்பு ஆகியவை மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியே இந்த சட்டத் திருத்தம் ஆகும்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல், ஓபிசி, தலித்துகள், பழங்குடியின சமூகத்தினரிடம் இருந்து அவா்களின் உரிமைகள் திருடப்படுவதை காங்கிரஸ் அனுமதிக்காது. அதேபோல், வடகிழக்கு, வடமேற்கு மற்றும் சிறிய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதையும் காங்கிரஸ் அனுமதிக்காது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

Summary

delimitation amendment attempted power grab using gerrymandering says rahul gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.