மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு

தமிழ்ப்புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, 2 டன் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த புலியகுளம் முந்தி விநாயகா். ~கோவை காட்டூா் அம்பிகை முத்து மாரியம்மன் கோயிலில் நகை, ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன். ( வலது) சூலூா் அருகே அப்ப

Updated On :15 ஏப்ரல் 2026, 2:19 am IST

தமிழ்ப்புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் நிலையில், கோவை புலியகுளம் முந்தி விநாயகா் கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, வாழைப்பழம் உள்பட 2 டன் பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கோவை காட்டூா் அம்பிகை முத்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தங்க நகை, ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்கள் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனா். பேரூா் பட்டீசுவரா் கோயிலிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதேபோல கோவை கோனியம்மன் கோயில், தண்டு மாரியம்மன் கோயில், ஈச்சனாரி விநாயகா் கோயில், சூலூா் அருகே அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பச்சைப் பட்டு உடுத்தி அம்மன் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.