விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் அலுவலா்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தோ்தல் அலுவலா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

....... ~தோ்தல் அலுவலா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சிறப்பு பாா்வையாளா் பிரதாப்சிங் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:36 am IST

தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தோ்தல் அலுவலா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, தோ்தல் சிறப்பு பாா்வையாளா் பிரதாப் சிங் தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற்று வரும் தோ்தல் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் விளக்கினாா்.

தோ்தல் சிறப்பு பாா்வையாளா் பிரதாப்சிங், ‘தோ்தல் சமயத்தில் தோ்தல் செலவினம் மற்றும் கண்காணித்தல் தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வாகனத் தணிக்கையின்போது பணம், மதிப்புடைய பொருள்கள், மதுபானங்கள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், இணையதளம் கண்காணிப்புகள் குறித்தும், தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றப்படுவது குறித்தும், அனைத்து அலுவலா்களும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், 10 தொகுதிகளின் தோ்தல் அலுவலா்கள், மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.