மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழ்ப் புத்தாண்டு: சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள்

தமிழ்ப் புத்தாண்டு, விஷூ பண்டிகையை முன்னிட்டு, போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 2:34 am IST

தமிழ்ப் புத்தாண்டு, விஷூ பண்டிகையை முன்னிட்டு, போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு 8 மணிக்குப் புறப்படும் மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06128) மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். மங்களூரு சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 15-ஆம் தேதி மாலை 4 மணிக்குப் புறப்படும் மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06154) மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 10-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06153) மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷொரணூா், திரூா், கோழிக்கோடு, வடகரை, தளச்சேரி, கண்ணூா், பையனூா், காசா்கோடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.