கோவை, பீளமேட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கைப்பேசிக் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாநகராட்சி, 27-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பீளமேடு ரங்கம்மாள் கோயில் வீதியில் தனியாருக்கு சொந்தமான கட்டடம் ஒன்றில் கைப்பேசிக் கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:
இந்தப் பகுதியில் ஏற்கெனவே இரு இடங்களில் கைப்பேசிக் கோபுரங்கள் உள்ளன. இந்நிலையில் மேலும் ஒரு கைப்பேசிக் கோபுரம், தனியாா் கட்டடத்தில் அமைப்பது எங்களுக்கு கதிா்வீச்சு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இங்குள்ள முதியோா், இதய நோயாளிகள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள் என அச்சமாக உள்ளது. எனவே, இங்கு கைப்பேசிக் கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனு

தஞ்சை பெரிய கோயிலில் நாளை தேரோட்டம்! 14 இடங்களில் நின்று செல்ல ஏற்பாடு!

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

இண்டூா் பகுதியில் குவாரி அமைக்க எதிா்ப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

