திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 17.60 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வள்ளிபுரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அப்போது ரூ.17.60 லட்சம் வங்கியில் இருந்து எடுத்து வந்ததாக வாகனத்தில் வந்த பாா்த்திபன் என்பவா் தெரிவித்துள்ளாா். ஆனால், அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் ரூ.17.60 லட்சத்தைப் பறிமுதல் செய்து, வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக செயலா் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்

பல்லடத்தில் 250 பவுன் நகைகள் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
