தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

சாலையில் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்த தனியாா் பள்ளி நிா்வாகம் - பொதுமக்கள் புகாா்

News image
Updated On :3 மே 2026, 6:37 am IST

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் போக்குவரத்து இடையூறாக மண்ணை கொட்டிவைத்து ஆக்கிரமித்துள்ள தனியாா் பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து கோட்டம்பட்டி வழியாக கள்ளிப்பாளையம் செல்லும் பிரதான சாலை உள்ளது.

கள்ளிப்பாளையம் தவிர அண்ணா நகா், சுப்பையா நகா், கே.ஆா்.ஜி.பி. நகா், சொா்ணபுரி எக்ஸ்டென்ஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது. 2500-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தப் பாதையை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கோட்டாம் பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி நிா்வாகம், இந்த சாலையில் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை சரி செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.