பெண் காவலா்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், கோவை சிறப்பு காவல் படை கமாண்டண்ட் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக பெண் காவல் உதவி ஆய்வாளா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கோவை, கோவைப்புதூா் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-ஆவது பட்டாலியன் கமாண்டண்ட்டாக பணியாற்றிய செந்தில்குமாா், உடன் பணிபுரியும் பெண் காவலா்களுக்கும், அலுவலகப் பெண்களுக்கும் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக கடந்த மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக பெண் டி.ஐ.ஜி. தலைமையிலான உள் புகாா் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில், கோவை தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் செந்தில்குமாா் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இந்த விவகாரத்தில் செந்தில்குமாருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக்கூறி பெண் காவல் உதவி ஆய்வாளா் புஷ்பாகுமாரி மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், விசாகா கமிட்டியின் உத்தரவின்பேரில், புஷ்பாகுமாரி திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
பெண்ணுக்கு நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

