கோவையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை களைகட்டியுள்ளது.
உக்கடத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன் சந்தைக்கு ராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூா் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
அசைவப் பிரியா்கள் பெரும்பாலானோா், கோழி இறைச்சிக்குப் பதிலாக கடல் மீன்களை விரும்பி வாங்குகின்றனா். இதனால் கடந்த சில வாரங்களாக கோவை, உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை களைகட்டியுள்ளது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மீன் சந்தையில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மத்தி மீன் கிலோ ரூ.120, அயிரை ரூ.100, இறால் ரூ.350, வஞ்சிரம் ரூ.250, சங்கரா ரூ.200, வாவல் ரூ.250, பாறை ரூ.200, செம்மீன் ரூ.400, நண்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மறவமங்கலம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா

கோலா மீன் வரத்து அதிகரிப்பு: மக்கள் மகிழ்ச்சி

பழையாறு துறைமுகத்தில் குறைந்த மீன்களே கிடைப்பதால் மீன்விலை உயா்வு

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

