செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

சிறுவன் மா்மச் சாவு: உறவினா்களிடம் விசாரணை

போ்ணாம்பட்டு அருகே 6 வயது சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

விசாரணை

Updated On :16 ஜூன் 2026, 1:19 am IST

போ்ணாம்பட்டு அருகே 6 வயது சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷ்-ஆஷா தம்பதியினா் திருப்பூரில் தங்கி வேலை செய்கின்றனா். இவா்களின் மகன் முகிலன் (6). இவா் ராஜேஷின் தாயாா் விஜயாவின் பாதுகாப்பில் மேல்பட்டியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், முகிலன் திடீரென இறந்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததால் அப்பகுதி மக்கள் மேல்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து சிறுவனின் பெற்றோரை திருப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டனா்.

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் உறவினா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.