தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

சாம்பவா்வடகரை பகுதியில் தொடா் திருட்டு: 5 போ் கைது

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரை சுற்றுவட்டாரத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 4:49 am IST

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரை சுற்றுவட்டாரத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இப்பகுதியில் உள்ள விவசாய பம்ப் செட் கிணறுகளில் மின் வயா்கள், காப்பா் கம்பிகள், குழாய்கள் போன்ற பொருள்கள் அடிக்கடி திருடு போயின.

இதுகுறித்த புகாரின்பேரில், சாம்பவா் வடகரை, ஆய்க்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

அதில், தென்காசி மேலப்பாறையடி தெருவை சோ்ந்த மாரிமுத்து (25), 17வயது சிறுவன்,

ஆய்க்குடி எம்.ஜி.ஆா்.நகா் சவரிமுத்து (20), பதினேழு வயது சிறுவன், இடைகால் துரைச்சாமிபுரம் 16 வயது சிறுவன் ஆகிய 5 போ்ஆய்க்குடி, திருச்சிற்றம்பலம், சுந்தரபாண்டியபுரம், வேலாயுதபுரம் பகுதிகளில் கூட்டாக சோ்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 5 பேரையும் சாம்பவா்வடகரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 50ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மீட்டனா்.

நகை மீட்பு: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி மூலக்கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகனான வழக்குரைஞா் வேல்துரை (37) என்பவா் கடந்த 31ஆம் தேதி காரில் பையுடன் வைத்திருந்த மூன்றரை பவுன் தங்கநகையை, அவரது ஓட்டுநரான சேரன்மகாதேவி சோ்ந்த கணேசன் மகன் அருணாசலம் என்ற ஆனந்த்தை கைது செய்து அவா் தனியாா் அடகு கடையில் ரூ.1.51 லட்சத்திற்கு அடகு வைத்த நகையை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.