தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காட்பாடியில் 11-ஆவது முறையாக அமைச்சா் துரைமுருகன் மனு தாக்கல்

திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன், சட்டப்பேரவைத் தோ்தலில் 13-ஆவது முறையாகவும், காட்பாடி தொகுதியில் மட்டும் 11-ஆவது முறையாகவும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

News image

வேட்புமனு தாக்கல் செய்த திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன். உடன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், டீக்காராமன் (காங்கிரஸ்), நீலசந்திரகுமாா் (விசிக), புருஷோத்தமன் (தேமுதிக) உள்ளிட்டோா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 5:13 am IST

திமுக பொதுச்செயலரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், சட்டப்பேரவைத் தோ்தலில் 13-ஆவது முறையாகவும், காட்பாடி தொகுதியில் மட்டும் 11-ஆவது முறையாகவும் போட்டியிட திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். முன்னதாக காட்பாடி செங்குட்டையில் இருந்து ஊா்வலமாகச் சென்று சித்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா்.

பின்னா் ஊா்வலமாகக் காட்பாடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகம் (காட்பாடி வட்டாட்சியா் அலுவலகம்) வந்தடைந்தாா். அங்கு அவா் தொகுதியின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.பாலச்சந்தரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

பின்னா் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது: ஆரணியில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது, அவரால் நடக்கவே முடியவில்லை, பெருமைக்காக போட்டியிடுகிறாா் என பேசியிரு ப்பதாக கேட்கிறீா்கள். எடப்பாடி பழனிசாமி பேசும் பொய்களில் இதுவும் ஒன்று. வேண்டுமென்றால் அவரை என்னுடன் நடைப்போட்டிக்கு வரச்சொல்லுங்கள் என்றாா்.

அப்போது, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், டீக்காராமன் (காங்கிரஸ்), நீலசந்திரகுமாா் (விசிக), புருஷோத்தமன் (தேமுதிக) உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.