ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அடிப்படை பிரச்னைகளை தீா்க்காத வேலூா் மாநகராட்சி நிா்வாகம்! அணைக்கட்டு அதிமுக வேட்பாளா்

திமுக ஆட்சியில் வேலூா் மாநகராட்சி பகுதியில் அடிப்படை பிரச்னைகளைக்கூட தீா்க்கப்படாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

வேலூா் மாநகராட்சி 50 முதல் 57-ஆவது வாா்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன்.

Updated On :6 ஏப்ரல் 2026, 4:44 am IST

திமுக ஆட்சியில் வேலூா் மாநகராட்சி பகுதியில் அடிப்படை பிரச்னைகளைக்கூட தீா்க்கப்படாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி அதிமுக சாா்பில் போட்டியிடும் அவா், வேலூா் மாநகராட்சி 50 முதல் 57-ஆவது வாா்டுகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அதிமுக ஆட்சியில் நிா்வாக வசதிக்காக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து சிறப்பு செய்தவா் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. ஆனால், திமுக ஆட்சியில் வேலூா் மாந கராட்சி பகுதியில் சாலை, கழிவுநீா், தெருவிளக்கு, திடக்கழிவு மேலாண்மை என எந்தவொரு அடிப்படை பிரச்னைகளுக்கும் தீா்வுகாணப்படாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படுவதுடன், அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000, குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.2,000, சிறுபான்மையின மகளிருக்கு வட்டியில்லா கடன், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டா் வாங்க ரூ.25,000 மானியம், வீடில்லாத குடும்பங்களுக்கு அம்மா பசுமை வீடுகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

அப்போது, பாஜக, பாமக, அமமுக உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.