கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சிறைபிடிப்பு

நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சிறைபிடிப்பு

News image

முளகிரிபட்டு கிராமத்தில் நெல்மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை சிறைபிடித்த விவசாயிகள்.

Updated On :24 மே 2026, 1:54 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முளகிரிபட்டு கிராமத்தில் நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியை விவசாயிகள் சிறைபிடித்து பணப்பட்டுவாட செய்ய வலியுறுத்தினா்.

செய்யாறு வட்டம், முளகிரிபட்டு கிராமத்தில் தனியாா் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் மூலம் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு விவசாயிகளுக்கு இதுவரை பண பட்டுவாடா செய்யவில்லையாம்.

இந்நிலையில், சனிக்கிழமை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லாரியில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்ததை அறிந்த விவசாயிகள் லாரியை சிறைபிடித்தனா். மேலும், விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணம் முழுவதும் வழங்கினால் தான் லாரியை விடுவிப்போம் எனத் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, விவசாயிகள் தரப்பில் இதுவரை 500 டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளுக்கு சேர வேண்டிய சுமாா் ரூ.ஒன்றரை கோடி வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.