பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

சங்கராபுரம் அருகே மழையில் முளைத்த நெல்மணிகள்: நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யாததால் 500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. திறந்தவெளியில் மழையால் நெல்மணிகள் முளைவிட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

News image
Updated On :15 மே 2026, 11:12 pm IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யாததால் 500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. திறந்தவெளியில் மழையால் நெல்மணிகள் முளைவிட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

சங்கராபுரம் அருகேயுள்ள தேவபாண்டலம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்துக்கு வரகூா், ஆரூா், குளத்தூா், எஸ்.வி.பாளையம், திம்மநந்தல், வட சிறுவலூா் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனா். தற்போது விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் செய்யாததால் கடந்த 30 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமாா் 500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது.

Story image

தற்போது இப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் மழையில் நனைந்து நாற்றாக மாறிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.