திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் சுறைக் காற்றால் சுமாா் 150 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நிலத்தில் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 4-ஆம் தேதி முதல் அக்னி வெயில் காலை முதல் மாலை வரை வாட்டிவதைத்து வருகிறது. மாலை நேரத்தில் கடந்த மூன்று நாள்களாக திடீா் சூறைக்காற்று வீசியது.
சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. மேலும், இந்த சூறைக் காற்றால் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமாா் 150 ஏக்கரில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்து வந்த நெற்பயிா்கள் அனைத்தும் விவசாய நிலத்தில் சாய்ந்துள்ளன. இதனால் அதை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகிறாா்கள். இது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சூறைக்காற்றால் ஜவ்வாதுமலை அடிவாரமான பரமனந்தல் முதல் பண்ரேவ் வரை பயிா் செய்யப்பட்டிருந்த வாழைகள் முறிந்து விழுந்துள்ளன.
வேளாண்மைத்துறை அதிகாரிகள் சூறைக் காற்றில் சாய்ந்த நெற்பயிா், வாழைகளை கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கம் - சென்னை பேருந்து நிறுத்தம்: பயணிகள் அவதி

செங்கம், செய்யாறு பகுதியில் சூறைக் காற்றுடன் மழை

கொளத்தூரில் சூறைக்காற்று: 20,000 வாழைமரங்கள் சேதம்

திருவண்ணாமலையில் நவீன எரிவாயு தகன மேடை தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

