தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

செங்கம், செய்யாறு பகுதியில் சூறைக் காற்றுடன் மழை

News image
Updated On :4 மே 2026, 1:07 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் செய்யாறு சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக மாலை நேரத்தில் மேகம் சூழ்ந்து சூறைக்காற்று அடித்து சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 6 மணியளவில் திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. அந்த மழை சுமாா் 45 நிமிடங்கள் நீடித்தது.

இதனால் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் தண்ணீா் இல்லாமல் காய்ந்து வந்த பயிா்களுக்கு தேவையான தண்ணீா் கிடைத்துள்ளது. மேலும், வனப்பகுதியில் தண்ணீா் இல்லாமல் தவித்த வனவிலங்குகளுக்கு குடிநீா் கிடைத்துள்ளது.

காய்ந்து வந்த மரம், செடி, கொடிகள் உயிா் பிழைக்க இந்த மழை காரணமாக அமைந்துள்ளது. மேலும், சூறைக் காற்று அதிகமாக இருந்ததால் செங்கம் பகுதியில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை மின் தடங்கல் ஏற்பட்டது. இந்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியைடந்துள்ளனா்.

செய்யாறு

செய்யாறு சுற்று வட்டாரப் பகுதிகளான செய்யாறு, தூளி, வடதண்டலம், தண்டரை, அனக்காவூா், பல்லி, சிறுங்கட்டூா், மாங்கால், வெம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சூறைக் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. சாலையில் மண் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.

தொடா்ந்து சாரல் மழையாக பொழிந்து மிதமான முதல் கனமழை பெய்தது இரு சக்கர மற்றும் சாலையில் நடந்து செல்வோா் மழை மற்றும் காற்றில் சிரமத்துடன் கடந்து சென்றனா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்ததால், மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், 3 மணி நேரத்திற்கு மேலாக செய்யாறில் பல பகுதிகள் இருளில் மூழ்கி இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.