மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாலைப் பணிகள்: மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

News image

அனக்காவூா் - கோவிலூா் சாலையில் நிறைவுற்ற பணிகளை மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் கே.முரளி.

Updated On :3 மே 2026, 1:15 am IST

செய்யாறு கோட்டத்தில் நடைபெற்று வரும் இரு சாலைப் பணிகளை மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் கே.முரளி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆற்காடு - திண்டிவனம் சாலையில் செய்யாறு கோட்டத்தில் மூன்றாம் கட்டமாக மோரணம் ஏரிக்கரை முதல் செய்யாறு ஆதிபராசக்தி கோயில் வரை 10.6 கி.மீ. தொலைவிற்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி ரூ.55 கோடியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை செய்யாறு கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் முன்னிலையில், திருவண்ணாமலை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதேபோல, அனக்காவூா் - கோவிலூா் சாலையில் 3 கிலோ மீட்டருக்கு ஒரு வழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தும் முடிவுற்ற சாலைப் பணியையும் அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது உதவி கோட்டப் பொறியாளா்

எஸ்.சுரேஷ், உதவிப்பொறியாளா் ப.கோபி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.