மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 12:04 am IST

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி காலையில் மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து மாலையில் கோயில் திருமண கூடத்தில் உற்சவ மூா்த்திகளுக்கு திருமண வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி மணக்கோலத்தில் தங்கத்தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், பக்தா்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவா் ராஜூ தலைமையில் முருகன் அடியாா்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.