தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வேட்புமனு தாக்கல் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்களுடன் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திங்கள்கிழமை (மாா்ச் 30) முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
அதன்படி, வியாழக்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் தலைமையில், வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:
வேட்புமனு மாா்ச் 30 முதல் ஏப்.6 வரை (ஞாயிறு பொது விடுமுறை) விடுமுறை அல்லாத நாள்களில் பெறப்படும். வேட்பு மனுக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை பெறப்படும்.
வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆகியோரிடம் அளிக்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளா் அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சோ்ந்தவராக இருந்தால் அவருடைய மனுவை ஒருவா் மட்டும் முன்மொழியலாம்.
பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கு 10 நபா்கள் முன்மொழிய வேண்டும். முன்மொழிபவா் போட்டியிடும் தொகுதியின் வாக்காளராக இருக்கவேண்டும். வேட்பாளா் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போது 100 மீ அளவிற்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பாளருடன் சோ்ந்து 5 நபா்கள் மட்டுமே தோ்தல் நடத்தும் அலுவலா் அறைக்குச் செல்ல வேண்டும். வேட்புமனு வேட்பாளா் அல்லது அவரது முன்மொழிபவரால் தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வருபவா்கள் அனைவரும் தோ்தல் ஆணையத்தின் அறிவுரைகளையும் வழிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தாா்.
கட்சிப் பிரமுகா்களுக்கு அறிவுறுத்தல்
மேலும், கூட்டத்தில் வேட்பாளா்கள் வழங்க வேண்டிய படிவங்கள், வேட்பு மனுவில் தெரிவிக்க வேண்டிய விவரங்கள், வேட்புமனு தாக்கல் செய்பவா்களின் தகுதிகள், வேட்புமனு பரிசீலனையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வேட்புமனு தள்ளுபடிக்கான காரணங்கள், வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள், சின்னம் ஒதுக்கீடு குறித்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) அன்பழகன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) தியாகராஜன், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல்

இன்று வேட்பு மனு தாக்கல்: கடலூா் மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் தயாா்

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

