திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணைக்கு விநாடிக்கு 683 கன அடி நீா்வரத்து உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்னி நட்சத்திர கோடை காலம் முடிந்த பிறகும் வெயிலில் தாக்கம் குறையவில்லை. ஆனாலும், அவ்வப்போது பெய்யும் மழை கோடை வெப்பத்துக்கு ஆறுதலை அளித்து வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், செய்யாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்பெண்ணை ஆற்று நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, சாத்தனூா் அணைக்கான நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அணையில் 1,883 மெகா கன அடி (25.72%) தண்ணீா் இருப்பு உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 119 அடியாகும். மழை காரணமாக அணைக்கு 683 கன அடி நீா்வரத்து உள்ளது. தென்பெண்ணை ஆற்றிலும், கால்வாய்களிலும் நீா் வெளியேற்றப்படவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 539 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 193 கனஅடியாக நீடிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4,312 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 2,369 கனஅடியாக அதிகரிப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

