பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4,312 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 4,312 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image

மேட்டூா் அணை

Updated On :3 ஜூன் 2026, 5:43 am IST

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 4,312 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 1,951 கனஅடியாக இருந்த நீா்வரத்து திங்கள்கிழமை காலை 2,369 கனஅடியாகவும், செவ்வாய்க்கிழமை காலை 4,312 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 79.16 அடியாக இருந்த நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 79.26 அடியாகவும், செவ்வாய்க்கிழமை காலை 79.56 அடியாகவும் உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 41.49 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12 இல் தண்ணீா் திறக்கமுடியாத நிலையில், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.