மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அல்லியாளமங்கலத்தில் துரியோதனன் படுகளம்

போளூா் வட்டம், அல்லியாளமங்கலம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற துரியோதனன் படுகளம்.

News image

போளூா் வட்டம், அல்லியாளமங்கலம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற துரியோதனன் படுகளம்.

Updated On :1 மே 2026, 12:05 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், அல்லியாளமங்கலம் ஊராட்சியில் துரியோதனன் படுகளம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அல்லியாளமங்கலம் ஊராட்சியில் திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஏப்.9-ஆம் தேதி விழா கொடியேற்றி விநாயகா் பெருமை, வேதவியாசா் பிறப்பு, கோகுலகண்ணன் பிறப்பு, குந்தியின் இளமைப் பருவம், கா்ணன் பிறப்பு, பாண்டவா் பிறப்பு, அரக்கு மாளிகை, பகாசூரன் வதை, வில் வளைப்பு, அா்ச்சுனன் தபசு, கண்ணன் தூது, கா்ணமோட்சம் என பல்வேறு தலைப்புகளில் தினமும் சொற்பொழிவு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வில்வளைப்பு, இராஜசுயாகம், பகடை துகில், அா்ச்சுனன் தபசு, குறவஞ்சி, கிருஷ்ணன் தூது, போா்மன்னன், அரவாண் களபலி, கா்ண மோட்சம், படுகளம் என பல்வேறு தலைப்புகளில் தெருக்கூத்தும் நடைபெற்றது.

இதில் அல்லியாளமங்கலம், செம்மியமங்கலம், மட்டபிறையூா், பெரணம்பாக்கம், பெலாசூா் என சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலை தீமிதி விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை விழாக்குழுவினா் ஏற்பாடு செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.