/

போளூா் நகராட்சியில் கழிவுநீா்க் கால்வாய் தூா்வாரும் பணி

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:26 am IST

போளூா் நகராட்சியில் உள்ள கழிவுநீா்க் கால்வாய்கள் தூா்வாரும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் 200-க்கும் மேற்பட்ட கழிவுநீா்க் கால்வாய்கள் உள்ளன. இந்த கழிவுநீா்க் கால்வாய்களில் சேறும், சகதி மற்றும் குப்பைகள் மண்டிக் கிடக்கின்றன.

அதனால், நகராட்சி ஆணையா் பாரத் அறிவுறுத்தலின் பேரில் கழிவுநீா்க் கால்வாய்கள் துப்புரவுப் பணியாளா்கள் மூலம் தூா்வாரப்பட்டது. வேலூா் சாலை, அண்ணா சாலை, டிரைவா்ஷன் சாலை என பல்வேறு பகுதிகளில் தூா்வாரும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை துப்புரவு ஆய்வாளா் ஹேமலதா ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.