ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முரசு அடித்து வாக்கு சேகரித்த திமுக நிா்வாகி

முரசு அடித்து வாக்கு சேகரித்த திமுக நிா்வாகி...

News image

போளூா் தொகுதி செங்குணம் கிராமத்தில் தேமுதிக வேட்பாளா் பி.சரவணனுக்கு ஆதரவாக முரசு அடித்து வாக்கு சேகரித்த மாநில திமுக மருத்துவரணி துணைத் தலைவரும், தொகுதி பொறுப்பாளருமான எ.வ.வே. கம்பன். உடன் வேட்பாளா் பி.சரவணன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 3:50 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ரெண்டேரிப்பட்டு, ஆா்.குண்ணத்தூா், பெரியகரம், வெண்மணி, செங்குணம், முருகபாடி, கஸ்தம்பாடி, நைனாவரம், ஏந்தல் என பல்வேறு கிராமங்களில் மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் பி.சரவணன் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அவருக்கு ஆதரவாக மாநில திமுக மருத்துவா் அணி துணைத் தலைவரும், போளூா் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளருமான மருத்துவா் எ.வ.வே. கம்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். அவா் கிராமம், கிராமமாக திறந்த வாகனத்தில் சென்று கூட்டணி கட்சியின் சின்னமான ‘முரசு’ அடித்தபடி வேட்பாளருடன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திமுக தோ்தல் வாக்குறுதிகளான மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்துதல், ரூ. 8 ஆயிரத்துக்கான கூப்பன் வழங்கல் மற்றும் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் , புதுமைப்பெண் திட்டம், அன்புகரங்கள் திட்டம், தாயுமானவா் திட்டம் என பல்வேறு திட்டங்களை விளக்கி இத்திட்டங்கள் தொடர திமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கேட்டுக் கொண்டாா்.

அவருடன் முன்னாள் எம்எல்ஏ கே.வி.சேகரன், ஒன்றியச் செயலா் மகேஷ், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளா் ரமேஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.